Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: வக்கீல் நந்தினி தனது தந்தை, சகோதரியுடன் மதுக்கடைகளை மூடக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினிக்கு திருமணம் நடந்தது. தற்போது கணவர் குணாவுடன் இணைந்து, மதுவுக்கு எதிராக போராட்டத்தை துவக்கி உள்ளார்.
இவர், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கணவர் குணா மற்றும் தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து, மதுரையில் இருந்து வேலூருக்கு டூவீலரில் கையெழுத்து இயக்க பயணத்தை நேற்று துவக்கினார்.
செல்லும் வழியில் அவர்கள் மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர். இதுகுறித்து நந்தினி கூறுகையில், ‘‘பெறப்படும் கையெழுத்துகள் அனைத்தையும் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியிடம் ஒப்படைப்போம்’’ என்றார்.